விவசாயத்தில் அதிக மகசூல் பெற உதவுவதில் காய்கறிப் பயிர்களும் சிறந்தவை. அதிலும் கீரை வகை பயிர்களில் அதிக மகசூல் ஈட்ட முடியும். அந்த வகையில் இன்று தண்டு கீரை சாகுபடி பற்றி இங்கு காணலாம். தண்டு கீரை சாகுபடிக்கு சித்திரை, ஆடி, மார்கழி, மாசி பட்டம் ஏற்றவை. இவற்றிற்கு நல்ல மண்ணும் மணலும் கலந்த அமிலத்தன்மை கொண்ட இரு பண்பாட்டு நிலமும் ,செம்மண் நிலம் உகந்தது. அதிக களிமண் கொண்ட நிலத்தை தவிர்க்க வேண்டும். ஒரு எக்டருக்கு 2.5 கிலோ விதைகள் தேவைப்படும். தேர்வு செய்த நிலத்தில் ஏக்கருக்கு 5 டன் தொழு உரம், 4 டன் எருவை கலந்து பரவலாகக் கொட்டி உழவு செய்து மண்ணை சமப்படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு நீர் பாய்ச்சுவதற்கு ஏற்றவாறு தேவையான அளவுகளில் பாத்திகள் அமைக்க வேண்டும். கீரை விதைகலோடு மணல் கலந்து பாத்திகளில் தூவி விட வேண்டும் .அப்பொழுதுதான் விதைகள் சீராக விழுந்து முளைக்கும் .பிறகு கையால் கிளறி பாசனம் செய்ய வேண்டும். விதைகள் விதைத்த உடன் நீர்ப்பாசனம் செய்யவேண்டும். விதைகள் ஒரு பக்கமாக அடித்துச் செல்லாமல் இருக்க பூவாளியால் நீர் பாய்ச்ச வேண்டும் .விதைத்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும். ..இக்கீரைக...