தென்னையில் ரூகோஸ் வெள்ளை ஈ தாக்குதலும் மேலாண்மை முறைகளும் தென்னை வளர்ப்பில் பூச்சி, நோய்த் தாக்குதல் உழவர்கள் நெடுங்காலமாகச் சந்தித்து வரும் பிரச்சினை. சுமார் 800 பூச்சியினங்கள் தென்னையைத் தாக்கிச் சேதத்தை விளைவித்து வந்தாலும் காண்டாமிருக வண்டு, சிவப்புக் கூன் வண்டு, கருந்தலைப் புழு, எரியோபிட் சிலந்தி, சுருள் வெள்ளை ஈ போன்றவை தென்னைச் சாகுபடியில் பெரும் சேதத்தை விளைவிக்கக்கூடியவை. இந்த வெள்ளை சுருள் ஈ பற்றியும் அதன் மேலாண்மை முறைகள் குறித்தும் இந்த கட்டுரையில் பார்க்கலாம். அமெரிக்காவில் 2004-ல் பெலிஸ், புளோரிடா மாகாணத்திலும் தென்னையில் கண்டறியப்பட்ட சுருள் வெள்ளை ஈ, இந்தியாவில் முதல்முறையாக 2016-ம் ஆண்டு பொள்ளாச்சி சுற்று வட்டாரப் பகுதிகளில் தென்னையில் கண்டறியப்பட்டது. இந்த ஈ அனைத்து ரகத் தென்னையிலும் பாதிப்பு ஏற்படுத்தினாலும் சௌகாட் ஆரஞ்சு குட்டை, மலேசியன் மஞ்சள் குட்டை, மலேசியன் பச்சை குட்டை, நெட்டை, வீரிய ஒட்டு ரகங்களில் அதிக அளவில் தாக்குதலை ஏற்படுத்துகின்றன. இதேபோல் கொய்யா, மா, நாவல், வாழை, வெண்டை, சப்போட்டா, எலுமிச்சை, செம்பருத்தி, சீத்தாபழம், கருவேப்பிலை போன்றவற்றையும் இவை...