முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எலிகள்தொல்லையை கட்டுப்படுத்துவது எப்படி ?

  எலிகள்தொல்லையை கட்டுப்படுத்துவது எப்படி ? ஆந்தை மற்றும் கோட்டான் போன்ற பறவைகள் அதிகமான எலிகளை இரவில் வேட்டையாடும் பழக்கத்தை கொண்டவை அதை மட்டும் கோட்டங்களை நம் இடத்திற்கு வரவழைக்க ஒரு ஏக்கரில் ஐந்து முதல் எட்டு இடங்களில் 6 அடி முதல் 8 அடி உயரம் கொண்ட T வடிவ குச்சிகளை நட்டு வைப்பதன் மூலம் ஆந்தைகளும் கோட்டான்களும் நிலத்திற்கு வரவழைக்க முடியும். மேலும் ஆந்தை மற்றும்  கோட்டான்களுக்கு தேவையான இருப்பிட வசதிகளை மரப்பெட்டி கொண்டு செய்வதன் மூலம் நிலத்தில் இருக்கும் மரத்தின் உயரமான பகுதிகளில் வைப்பதன் மூலம்  ஆந்தை மற்றும் கோட்டான்கள் அங்கு வந்து தங்கி தனது இனப்பெருக்கத்தை செய்யும் பொழுது உங்களுக்கு அதிகமான எலிகளை கட்டுப்படுத்த வசதியாக இருக்கும்.  கோட்டான் மற்றும் ஆந்தைகள் ஒருமுறை முட்டை வைத்து குஞ்சு பொரித்தவுடன் அதன் குஞ்சுகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முதல் மூன்று எலிகளை உணவாக கொடுக்கும் தேவை இருக்கும் மேலும் தாய் பறவைகளும் எலிகளை மிக கச்சிதமாக வேட்டையாடி கொன்று விடும் இதனால் உயிரியல் முறைப்படி கோட்டான்கள் மற்றும்  ஆந்தைகள் மூலம் நம் நிலத்தில் இருக்கும் எலிகளை ...

மொச்சை சாகுபடி

மொச்சை சாகுபடி வறட்சியில் கை கொடுக்கும் மொச்சை  வறட்சியான   நிலங்களில்  விவசாயம்  செய்ய மிகவும் உகந்த பயிர் ஆகும். இது Rajma Beans என்றும் , மொச்சை பயறு in english bean என்றும் அழைக்க படுகிறது . தமிழில் mochai kottai , mochiai payaru  என்ற பல்வேறு பெயர்களில் அழைக்கபடுகிறது . மொச்சை வகைகள் வெள்ளை மொச்சை கருப்பு மொச்சை என்னும் மர மொச்சை சாகுபடி செய்ய உகந்த பட்டம் ,  ஆடி பட்டம்  மானாவாரியாக பயிர் செய்யலாம் .இதற்கான நிலத்தை ஆணி மாதம் உழவு செய்து விடவேண்டும் .இந்த நிலத்தில் 5 முதல் 7 உழவு வரை செய்து நிலத்தை தயார் செய்ய வேணும். கடைசி உழவாக மண்ணை நன்கு துளாக்கும்  டோடவடோர் கொண்டு உழவு செய்தால் மண் கட்டிகள் இல்லாமல் மிருதுவாக இருக்கும். இதன் மூலம் களைகள் கட்டுப்படும். மேலும் நோய் தாக்கும் பூசிகள் முட்டைகள் அழிக்க பட்டு விடும் . இருந்தும் காய் புழு தாக்குதல் இறக்கும் நேரங்களில் கவனித்து நோய்கட்டுபட்டு முறைகளை கடைபிடிக்க வேண்டும் . விதை நேர்த்தி : விதைப்பு செய்ய விதைகளை  20  மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து விதைப்பு செய்யவேண்டும் . இதன் மூலம்...

பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுத்து சாகுபடி;

பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுத்து சாகுபடி; அசத்தும் பொறியியல் பட்டதாரி! தமிழகத்தில் இதுவரை யாரும் பயிரிடாத பல பாராம்பர்ய நெல் வகைகளை சிவரஞ்சனி தேடிக் கொண்டுவந்து பயிரிட்டுள்ளார் என்பதோடு, ``பாரம்பர்யமான நெல் ரகங்களை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதே எனது இலக்கு" என்றும் உறுதிபடக் கூறுகிறார். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரியான சிவரஞ்சனி. தொலைந்துபோன பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தமிழகத்தில் மட்டுமன்றி இந்திய அளவிலும் தொலைந்த பாரம்பர்ய நெல் ரகங்களை, தன் கணவர் சரவணன் உதவியுடன் தேடிச்சென்று வருகிறார். அவற்றில் பல நெல் ரகங்களைக் கண்டறிந்து தனது வயலிலும் பயிரிட்டுள்ளார். வயலில் இதுபற்றி சிவரஞ்சனியிடம் பேசினோம். ``பண்டைய காலம் முதல் இந்தியாவில் சுமார் 22,000-க்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் இருந்துள்ளதாகத் தெரிகிறது. அவற்றில் மிக மிகக் குறைந்த அளவிலான நெல் ரகங்களையே தற்போது காண முடிகிறது. என் வாழ்நாளில் என்னால் முடிந்தளவு தொலைந்து போன நெல் ரகங்களை மீட்டு விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் ...