முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தென்னையில் ஊடுபயிர் சாகுபடி

தென்னையில் ஊடுபயிர் சாகுபடி





 தென்னந்தோப்பில் ஊடுபயிராக கோகோ மற்றும் மிளகு சாகுபடி செய்யலாம். ஒரு சமயத்தில் இரண்டு வருமானம் பெறலாம். கோகோவின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. சாக்லேட் மற்றும் கேக் ஊட்டசத்து பானங்கள் தயாரிப்பதற்கு முக்கிய மூலப் பொருளாக பயன்படுகிறது.

எப்படி பயிரிடுவது

இரண்டு தென்னை மரங்களுக்கு நடுவில் ஓரு கோகோ செடிநடுவது, அல்லது இரண்டு தென்னை வரிசையில் ஒரு வரிசை நடுவது. ஒரு ஏக்கருக்கு 200-225 செடிகள் தேவை. நடும் போது நாற்றின் வேர்பகுதியில் இருக்கும் மண்ணின் மேற்பரப்பும் பூமியின் மேற்பரப்பும் சம அளவில் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் கால்களால் நாற்றினை மிதித்து விடக் கூடாது.

கவாத்து செய்தல்

நட்ட மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் பருவ மழை காலங்களில் கவாத்து செய்ய வேண்டும்.

அறுவடை

முக்கிய தண்டான சுப்பானில் இருந்தும், விசிறி கிளைகளில் இருந்தும், பூக்கள் மலர்ந்து மஞ்சள் நிறமான பழங்கள் உண்டாகும். கூர்மையான கத்தி கொண்டே கோகோ பழங்களை அறுவடை செய்ய வேண்டும்.

பதப்படுத்தும் முறை

அறுவடை செய்த பழங்களை 4முதல்5நாட்கள் நிழலான இடங்களில் குவியலாக வைக்க வேண்டும். பின்னர் பழங்களை உடைத்து உள்ளிருக்கும் விதைகளை தனியாக பிரித்து ‌எடுத்து மூங்கில் கூடையில் சேகரிக்க வேண்டும். 3-4 நாட்கள் கூடையில் உள்ள விதைகளை கலக்கிவிடவேண்டும். அவ்வாறு செய்தால் ஒரே சீராக விதைகள் பதப்படுத்தப்படுகிறது. அதன் பின்னர் 3-4நாட்கள்

சூரிய ஒளியில் உலர்த்தி காபி நிறத்தில் விதையின் உட்பகுதியில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஊடுபயிர் சாகுபடியில் கிடைக்கும் நன்மைகள்

இரண்டு வருமானம் ஓரே நிலத்தில் கிடைக்கும். மண் வளம் பெருகும். களைகள் கட்டுப்படுத்த முடியும். கோகோ பழத்தின் ஒடு உரமாகவும், கால்நடை தீவனமாக பயன்படுத்தலாம். மேலும்,
தென்னையின் மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தற்போது அரசு தோட்டக்கலை துறை மூலம் 40 சதவித மானியத்தில் கோகோ நடவு செடிகள் வழங்கப்படுகிறது. பிற தனியார் நிறுவனங்கள் ஒப்பந்த சாகுபடி மூலம் செடிகள் வழங்குகிறது.

எனவே கூடுதல் வருமானமும், நில வளமும் பெற ஊடு பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.

கருத்துகள்

Popular Posts

விவசாயிகளுக்கு 8 வகையான மானியங்கள்

  விவசாயிகளையும் விவசாயத்தையும் ஆதரிக்க வேண்டும் என்று மத்திய அரசு விவசாயிகளுக்கு 8 வகையான  மானியங்களை வழங்குகிறது. மத்திய அரசு உரம், நீர்ப்பாசனம், விவசாய உபகரணங்கள், விவசாயம் செய்வதற்கான நிதி, விதை மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு மானியங்களை வழங்குகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2% விவசாய மானியங்களாக வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கான மொத்த மானியம் அவர்களின் விவசாய வருமானத்தில் 21% ஆக உள்ளது. நாளுக்கு நாள் விவசாயம் நலிவடைந்து வரும் தொழிலாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், விவசாயிகள், தேவையான நவீன முறைகளையும் பாரம்பரிய முறைகளையும் விவசாயத்தை மேம்படுத்துவதோடு மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் மானியங்கள் குறித்து தெரிந்துகொண்டு அவற்றை பெற்று பயனடைய வேண்டும். இந்தியாவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்களில் மொத்தம் 8 வகை மானியங்கள் உள்ளன. அந்த மானியங்களைப் பற்றி விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டும். விதை மானியம் உரம் மானியம் நீர்ப்பாசன மானியம் மின்சார மானியம் ஏற்றுமதி மானியம் கடன் மானியம் விவசாய உபகரணங்கள் மானியம் விவசாய உள்கட்டமைப்பு மானியம் விதை மானியம் அ...

நடவு முதல் மானியம் வரை

  தற்போது, உள்ளங்கையிலேயே அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட் போன்கள். அதில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன. தற்போது, உள்ளங்கையிலேயே அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட்போன்கள். அதில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன. அவற்றில், இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, வானிலை, வேளாண் காடுகள், சுற்றுச்சூழல் தொடர்பான தகவல்களை அளிக்கக்கூடிய செயலிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை குறித்துப் பார்ப்போம். நெல் நிபுணர் அமைப்பு (Paddy Expert System Tamil )  தமிழ்நாட்டின் முக்கியப் பயிரான நெல்லைப் பற்றி அனைத்துத் தகவல்களையும், இந்தச் செயலியின் மூலமாகப் பெற முடியும். இதைக் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் ஹைதராபாத்தில் உள்ள கணினி மேம்பாட்டு மையமும் இணைந்து உருவாக்கியிருக்கின்றன. செல்போனில் இந்தச் செயலி அதிக இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளும் என்றாலும், இதை இணைய இணைப்பு இல்லாமல் கூட பயன்படுத்த முடிய...

பாரம்பரிய களர்ப்பாலை நெல்

 திருவண்ணாமலை கிராமத்தில் பாரம்பரிய களர்ப்பாலை நெல் ரகத்தை காப்பாற்றும் விவசாயிகள்: களர் நிலங்களுக்கு தீர்வா? தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்பதும், அவற்றை மீண்டும் உழவுக்கு கொண்டு வருவதும் பல பகுதிகளில், இயற்கை வேளாண்மை ஆர்வலர்களால் முன்னெடுக்கப்படுகிறது. களர் நிலம், உவர் நிலம், வெள்ளம் சூழும் நிலம் போன்ற குறிப்பிட்ட சில வகை நிலங்களுக்குப் பொருத்தமாக இருப்பதும், அந்த நிலங்களில் விவசாயம் செய்ய இன்றியமையாததாகவும் இருக்கும் பாரம்பரிய நெல் ரகங்கள் மிகச் சில. அப்படி ஒரு ரகம் களர்ப்பாலை. களர், உவர் நிலங்களில் பயிர் செய்ய ஏற்றதாக தமிழ்நாட்டில் இருந்துவந்த ஒரே ரகமான களர்ப்பாலை, அழிவின் விளிம்புக்குச் சென்றுவிட்டது. ஆனால், திருவண்ணாமலை அருகே உள்ள நாகப்பாடி என்ற கிராமத்தில் காலம் காலமாக களர்ப்பாலை பரவலாக பயிர் செய்யப்படுவதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சிவப்பரிசி தரும் களர்ப்பாலையை கடைசியாக காப்பாற்றிக்கொண்டிருக்கும் ஊராக நாகப்பாடி இருப்பதோடு, நாகப்பாடி விவசாயிகள், களர்ப்பாலை விதைகளை பிற மாவட்ட விவசாயிகளுக்கும் வழங்கி வருகின்றனர். களர் நிலத்தை கொண்டுள்ள விவசாயிகளுக்கு நெல் சாகுபட...