முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிலக்கடலையில் துரு நோயும் மேலாண்மை முறைகளும்

 



அமெரிக்கா, வெனிசுலா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் அதிகமாகக் காணப்படும் இந்நோய் 1971- ம் ஆண்டு இந்தியாவில் தோன்றியது. பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. சமீபக் காலமாகக் கோயம்புத்தூர், சேலம், திருச்சி, புதுக்கோட்டை, மதுரைப் போன்ற மாவட்டங்களில் மிகுதியாகத் தோன்றி அதிக சேதத்தை விளைவிக்கிறது.

நோய்க்காரணி

இந்நோய் பச்சினியா அராக்கிடிஸ்  என்ற ஒரு வகைப் பூஞ்சையால் ஏற்படுகிறது. இப்பூசணம் பெரும்பாலும் யூரிடோ வித்துக்களை மாத்திரமே தோற்றுவிக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் இப்பூசணம் டீலியோ வித்துக் கூடுகளையும், டீலியோ வித்துக்களையும் தோற்றுவிக்கிறது என்றுக் கண்டறியப்பட்டுள்ளது.

நோயின் அறிகுறிகள்

நோயின் அறிகுறிகள் பயிர் விதைத்த சுமார் 6 வாரங்களுக்குப் பின்னரேத் தோன்றும். இலைகளின் அடிப்பரப்பில் சிறிய வட்ட வடிவ, பழுப்பு அல்லது கரும்பழுப்பு நிறத்தில் யூரிடோ வித்துக்கூடுகள், பருக்களைப் போல் தோன்றும். இலைகளின் புறத்தோலைப் பெயர்த்துக் கொண்டு பழுப்பு நிற யூரிடோ வித்துக்கள் வெளிவரும். அதிகளவில் வித்துக் கூடுகள் தோன்றி, அதிகளவில் வித்துக்கள் வெளிவரும் போது, இலைப்பரப்பின் மேல் பழுப்பு நிறத்தில் பொடித் தூவியது போன்றத் தோற்றத்தை அளிக்கும் யூரிடோ வித்துக் கூடுகளுக்கு நேர் எதிரான இலையின் மேற்ப்பரப்பில் சிறியப் பழுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும்.

நோயின் தீவிரம் அதிகமாகக் காணப்படும் போது, இலைப்பரப்பு முழுவதும் துருக் கூடுகளால் நிரப்பப் படுவதால், இலைகள் கரிந்து மடிந்து விடும். இளம் இலைகளை விட, முதிர்ந்த இலைகள் அதிகமாகத் தாக்கப்படும். நோய்த் தாக்கியச் செடிகளிலிருந்து உண்டாகும் காய்கள் சிறுத்தும், சுருங்கியும் காணப்படுவதோடு, பருப்பும் சரிவர முற்றாமல், சிறுத்தும், சுருங்கியும் காணப்படுவதால், எடையும் எண்ணைச் சத்தும் குறைவாகக் காணப்படும்.

நோய்ப் பரவும் விதமும் பரவுவதற்கு ஏற்ற காலநிலைகளும்

இந்த நோய்க் காரணியின் வாழ்க்கைச் சுழல் யூரிடோ வித்துக்களின் மூலம் மாத்திரமே தொடருகிறது. இந்நோய் காற்றின் மூலம் பரவக்கூடியது.

நோய்க்கட்டுப்பாடு

மருந்து சிகிச்சை

            ஏக்கருக்கு 10 கிலோக் கந்தகத் தூளைக் காலை வேளையில் பனிப்பதத்தில் தூவ வேண்டும் அல்லது ஏக்கருக்கு நனையும் கந்தகம் – 1000 கிராம் அல்லது மான்கோசெப் – 500 கிராம் வீதம் 250 லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்க வேண்டும். நோயின் அறிகுறி தென்பட்டவுடன் ஒரு முறையும், அதைத் தொடர்ந்து 10 – 15 நாள் இடைவெளியில் மறுபடி ஒரு முறையும் மருந்து உபயோகிக்க வேண்டும்.

கட்டுரையாளர்: கு.விக்னேஷ், முதுநிலை வேளாண் மாணவர், தாவர நோயியல் துறை,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்– 608002. தொடர்பு எண்: 8248833079

கருத்துகள்

Popular Posts

விவசாயிகளுக்கு 8 வகையான மானியங்கள்

  விவசாயிகளையும் விவசாயத்தையும் ஆதரிக்க வேண்டும் என்று மத்திய அரசு விவசாயிகளுக்கு 8 வகையான  மானியங்களை வழங்குகிறது. மத்திய அரசு உரம், நீர்ப்பாசனம், விவசாய உபகரணங்கள், விவசாயம் செய்வதற்கான நிதி, விதை மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு மானியங்களை வழங்குகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2% விவசாய மானியங்களாக வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கான மொத்த மானியம் அவர்களின் விவசாய வருமானத்தில் 21% ஆக உள்ளது. நாளுக்கு நாள் விவசாயம் நலிவடைந்து வரும் தொழிலாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், விவசாயிகள், தேவையான நவீன முறைகளையும் பாரம்பரிய முறைகளையும் விவசாயத்தை மேம்படுத்துவதோடு மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் மானியங்கள் குறித்து தெரிந்துகொண்டு அவற்றை பெற்று பயனடைய வேண்டும். இந்தியாவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்களில் மொத்தம் 8 வகை மானியங்கள் உள்ளன. அந்த மானியங்களைப் பற்றி விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டும். விதை மானியம் உரம் மானியம் நீர்ப்பாசன மானியம் மின்சார மானியம் ஏற்றுமதி மானியம் கடன் மானியம் விவசாய உபகரணங்கள் மானியம் விவசாய உள்கட்டமைப்பு மானியம் விதை மானியம் அ...

நடவு முதல் மானியம் வரை

  தற்போது, உள்ளங்கையிலேயே அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட் போன்கள். அதில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன. தற்போது, உள்ளங்கையிலேயே அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட்போன்கள். அதில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன. அவற்றில், இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, வானிலை, வேளாண் காடுகள், சுற்றுச்சூழல் தொடர்பான தகவல்களை அளிக்கக்கூடிய செயலிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை குறித்துப் பார்ப்போம். நெல் நிபுணர் அமைப்பு (Paddy Expert System Tamil )  தமிழ்நாட்டின் முக்கியப் பயிரான நெல்லைப் பற்றி அனைத்துத் தகவல்களையும், இந்தச் செயலியின் மூலமாகப் பெற முடியும். இதைக் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் ஹைதராபாத்தில் உள்ள கணினி மேம்பாட்டு மையமும் இணைந்து உருவாக்கியிருக்கின்றன. செல்போனில் இந்தச் செயலி அதிக இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளும் என்றாலும், இதை இணைய இணைப்பு இல்லாமல் கூட பயன்படுத்த முடிய...

தென்னை மரம் வளர்ப்பு: முழு வழிகாட்டி

  தென்னை மரம் வளர்ப்பு: முழு வழிகாட்டி (Coconut Cultivation Guide in Tamil) தென்னை மரம் (Cocos nucifera) ஒரு பல்நோக்கு மரமாகும், இது பழம், நார், எண்ணெய் மற்றும் தென்னை நீர் ஆகியவற்றிற்காக பயிரிடப்படுகிறது. சரியான முறைகளில் வளர்த்தால், 60-80 ஆண்டுகள் வரை பலன்தரும். 1. தென்னை நடவுக்கான சிறந்த மண் & காலநிலை மண் வகை: வண்டல் மண் (Sandy Loam) - சிறந்த வளர்ச்சிக்கு ஏற்றது. களிமண் (Clay Soil) - நீர் தேங்காத வகையில் வடிகால் செய்ய வேண்டும். pH மதிப்பு: 5.5 - 7.0 (குறைந்த உப்புத்தன்மை). காலநிலை: வெப்பம்: 25°C - 35°C (வெப்பமண்டல/உவர் நிலப்பகுதிகளுக்கு ஏற்றது). மழைப்பொழிவு: 1500-2500 மிமீ/ஆண்டு (நீர் தேங்காத வகையில் பாசனம் தேவை). 2. தென்னை வகைகள் & தேர்வு வகை பயன் பழம் காய்க்கும் காலம் டிஎன்டி (TND) உயர் மகசூல், எண்ணெய் 3-4 ஆண்டுகள் கிஆர் (KR) தென்னை நீர் & பழம் 4-5 ஆண்டுகள் கோபனகன் கடற்கரைப் பகுதிகளுக்கு 5-6 ஆண்டுகள் நாறு தேர்வு: 12-18 மாதம் பழுத்த நாறுகளை தேர்ந்தெடுக்கவும். நோயற்ற, உறுதியான வேர்கள் உள்ளதா பார்க்கவும். 3. நடவு முறைகள் குழி தயாரிப்பு: அளவு: 1m x 1m x 1m. குழிய...